Home » விடுதலை » பாவத்திலிருந்து » பரிசுத்த ஆவியானவர் நம்முடைய கடந்தகால பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்க முடியும்

பரிசுத்த ஆவியானவர் நம்முடைய கடந்தகால பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்க முடியும்


               

                    

You can read it in English here

போதகர் டேவிட் வில்கர்சன் 1950 களின் நடுப்பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களிடையே நியூயார்க்கின் தெருக்களில் தனது ஊழியத்தைத் தொடங்கினார். அந்த நேரத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் இல்லை. ஹாங்காங்கில் போதைக்கு அடிமையானவர்களிடையே பணியாற்றிய ஜாக்கி புல்லிங்கர் 1960 களில் இதேபோன்ற சவால்களை எதிர்கொண்டார். போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியாது என்று நம்பினர். அன்றைய தினங்களில் மருத்துவ சிகிச்சைகளால் போதைக்கு அடிமை பட்டவர்களை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் அது பரிசுத்த ஆவியானவருக்கு ஒரு சவாலாக இருக்கவில்லை. எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் போதை பழக்கத்திலிருந்து வெளியே வர ஒவ்வருக்கும் ஆன்மீக பலத்தையும் பரிசுத்தர ஆவியானவர் கொடுத்தார். பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய ஆவிக்கு உயிரைக் கொடுத்தார், அவர்கள் மீண்டும் பிறந்தார்கள். நியூயார்க்கில் குண்டர்களின் வாழ்க்கையை மாற்றிய அதே பரிசுத்த ஆவியானவர் இந்த செய்தியின் ஒவ்வொரு வாசகரின் வாழ்க்கையையும் நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலேயே மாற்ற முடியும். அவர் உங்களை நேசிக்கிறார். 

தாவீது ராஜா எழுதினார், "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.". ஆரம்ப நாட்களிலிருந்தே நம்முடைய ஆசைகளையும் விருப்பங்களையும் பின்பற்றினோம். ஆனால் ஆவிக்குரிய ரீதியில் இறந்த நிலையில் இருந்து நம்மை எழுப்ப கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர் நமக்கு உயிரைக் கொடுத்தார், நம்மை பாவ மரணத்திலிருந்து எழுப்பினார். பரிசுத்த ஆவியின் சக்தியால் புதிய வாழ்க்கை நம்மில் சுவாசிக்கப்பட்டது.

கடந்தகால தவறுகளிலிருந்து வெளிவருவதற்கான சக்தியை பரிசுத்த ஆவியானவர் நமக்கு அளிக்கிறார், நமக்குள் ஒரு புதிய மனிதனை உருவாக்குகிறார். இதை மீண்டும் பிறந்த அனுபவம் (Born again) என்று அழைக்கிறோம். இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பிய பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கும் ஆவிக்குரிய மனிதனுக்கு உயிரைக் கொடுக்கிறார். நம்முடைய கடந்த காலத்தை வெல்ல உதவுகிறார். பரிசுத்த ஆவியின் சக்தி இல்லாமல், ஒருவர் மனந்திரும்பி கடந்த கால வாழ்க்கையிலிருந்து வெளியே வருவது சாத்தியமில்லை. இயேசு, தம்மை நம்புகிற அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களைத் தூய்மை படுத்தி, நமது கடந்தகால பாவங்கள், தவறான பழக்கவழக்கங்கள், மற்றும் அடிமை தனத்திலிருந்து வெற்றி பெற உதவி செய்கிறார். நம்முடைய மனந்திரும்புதல் (வாழ்க்கையின் முழுமையான மாற்றம்) பரிசுத்த ஆவியின் சக்தியால் மட்டுமே வருகிறது. 

நாம் தூய்மையான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம், கிறிஸ்துவை முழு இருதயத்தோடு பின்பற்றி அவரை நேசிக்க விரும்புகிறோம். ஆனால் நம்முடைய வாழ்க்கையோ எதிர்மாறாக இருக்கிறந்து. பரிசுத்த ஆவியானவரை நம் வாழ்க்கையில் செயல்பட அனுமதிக்கும்போது, ​​கிறிஸ்துவை நேசிப்பதற்கான மனப்பான்மையை அவர் நமக்குத் தருகிறார். நம்முடைய வாழ்க்கையின் கட்டுப்பாட்டை அவரிடம் கொடுக்கும்போது சோதனையை எதிர்ப்பதற்கான பலத்தை அவர் நமக்குத் தருகிறார். பரிசுத்த ஆவியின் கட்டுப்பாட்டு சக்தி, நம் வாழ்க்கையில் தவறான தேர்வுகள், தேவையற்ற வார்த்தைகள், கோபம் மற்றும் வாதங்கள் தவிர்க்கப்படும். 

பரிசுத்த ஆவியானவர் நம்முடைய துன்பத்தின் போது நம்முடன் தங்கி, எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று தெரியாத நேரங்களில் அவர் நமக்காக ஜெபிக்கிறார். அவர் நம்முடைய காரியங்களுக்காக பிதாவிடம் மன்றாடுகிறார். வேதம் சொல்கிறது, "ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்." அவர் நமக்காக ஜெபிப்பது மட்டுமல்லாமல், நமக்கு ஆறுதல் கூறுகிறார், அறிவுறுத்துகிறார். மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட, பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் நம் இருதயங்களை ஆறுதல்படுத்த முடியும். அவர் ஒவ்வொரு பழிவாங்கலையும், வாதத்தையும், கசப்பையும் நம் இருதயத்திலிருந்து அகற்றி, அதே இருதயத்தை அமைதியாலும் மகிழ்ச்சியாலும் நிரப்புகிறார். 

அன்புள்ள நண்பரே, உங்கள் கடந்த கால தவறுகளிலிருந்து வெளியே வர நீங்கள் கடுமையாக முயற்சிக்கிறீர்களா? உங்கள் கடந்தகால பாவங்களை மன்னிக்க இயேசுவிடம் கேளுங்கள். அவர் நிச்சயமாக உங்கள் கடந்த காலத்தை மன்னித்து பரிசுத்த ஆவியானவரை உங்கள் வாழ்க்கையில் அனுப்புவார். ஆவியானவர் உங்களின் ஆவிக்குரிய மனிதனை எழுப்புவார். மேலும் நீங்கள் கடந்து வரும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து வெளியே வர உங்களுக்கு உதவுவார். உங்கள் வாழ்க்கையிலே அவரை அனுமதியுங்கள். அவருக்கு இடம் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை அவருக்குக் கொடுங்கள். அவரை நோக்கி நாம் ஜெபிப்போம்

அன்புள்ள பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்க்கையில் எனக்கு நீங்கள் தேவை. தயவுசெய்து என் வாழ்க்கையில் வாருங்கள். என்னைக் ஆட்கொள்ளுங்கள். கடந்த காலங்களில் நான் உங்களை பலமுறை காயப்படுத்தியுள்ளேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். எனது கடந்த கால தவறுகளிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. தயவுசெய்து எனக்கு உதவுங்கள். எனது கடந்த காலத்திலிருந்து எனக்கு ஒரு விடுதலை தேவை. எப்போதும் நான் செய்ய விரும்பாததைச் செய்து விடுகிறேன். எனது வாழ்க்கை மாற்றப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சோதனையை எதிர்க்க எனக்கு ஆவிக்குரிய பலத்தை கொடுங்கள். தயவுசெய்து என் இருதயத்தை தூய்மைப்படுத்துங்கள். மனந்திரும்பி என் கடந்த காலத்திலிருந்து தப்பி ஓட எனக்கு உதவுங்கள். நீங்கள் மட்டுமே எனக்கு உதவ முடியும் என்று நான் நம்புகிறேன். இயேசுவின் வலிமையான நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்

நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராக ஏற்று கொண்டீர்களா? நீங்கள் அடுத்தாக என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கே பார்க்கலாம் =>

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். உங்கள் ஜெப உதவிக்கு நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி