Home » விடுதலை » நோயிலிருந்து » நம்புங்கள் ஜெபியுங்கள் குணமடையுங்கள் Believe Pray and Be Healed

நம்புங்கள் ஜெபியுங்கள் குணமடையுங்கள் Believe Pray and Be Healed


               

                    

You can read it in English here

அன்புள்ள நண்பரே, நோயிலிருந்து குணமடைய விரும்புகிறீர்களா? கடவுளிடத்திலிருந்து உடனடி பதிலை எதிர்பார்க்கிறீர்களா? குணமடைய ஆசைப்பட்ட ஒரு மனிதனின் உண்மையான கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு கதை அல்ல, ஆனால் இயேசுவை நம்பும் மக்கள் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் உண்மை அனுபவம் . எனது வாழ்க்கையில் நான் தனிப்பட்ட முறையில் அனுபவிக்காததை நான் உங்களுக்குச் சொல்லவில்லை. கடவுளால் குணமடைந்தவர்களிடமிருந்து பல மின்னஞ்சல்களைப் பெறுகிறோம். பின்குறிக்கப்பட்ட மனிதனை போல நீங்கள் நம்பவும், ஜெபிக்கவும், பெறவும் முடிந்தால், கடவுள் இன்று உங்கள் வாழ்க்கையைத் தொட முடியும். 

கண் பார்க்கமுடியாதவரின் கதை 

ஒரு குருடர் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். அவர் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார். தனது வாழ்க்கை நம்பிக்கையற்றது, பயனற்றது என்று அவர் நினைத்தார். ஒரு நாள் அவர் சுற்றிச் சென்று பல நோய்களைக் குணப்படுத்தும் ஒரு மனிதனைப் பற்றிய விசித்திரமான கதைகளைக் கேட்டார். பார்வையற்றவர் இந்த குணப்படுத்துபவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நலமாய் இருக்குமே என்று ஏங்கினார் . ஆனால் அவரை குணப்படுத்துபவரிடம் அழைத்துச் செல்ல யாரும் இல்லை. குணப்படுத்துபவர் எங்கே என்று கூட அவருக்குத் தெரியாது. கண் தெரியாததினால் ஒவ்வொரு நாளும் அவர் தனது சாலையோர இடத்திற்கு அழைத்துச் செல்ல யாரையாவது சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. அவர் அங்கு அமர்ந்து நாள் முடியும் வரை பிட்சை கேட்பார். பின்னர் அவர் தனது சிறிய தங்குமிடம் ஒன்றிற்கு அழைத்துச் செல்ல யாரையாவது தேடுவார். இது பல வருடங்களாக தொடர்ந்தது. 

ஊமை, குருட்டு, நோய்வாய்ப்பட்ட மற்றும் பலரைக் குணப்படுத்திய குணப்படுத்துபவரைப் பற்றி அடிக்கடி அவர் கேள்விப்பட்டார் . பார்வையற்றவர் நாள் முழுவதும் கனவு கண்டுகொண்டே இருந்தார். இந்த குணப்படுத்துபவரை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் நலமாய் இருக்குமே!! 

அது ஒரு வழக்கமான காலை. பார்வையற்றவர் தனது வழக்கமான இடத்தில சாலையோரம் அமர்ந்தார். வழியில் நடந்து செல்லும் பலரின் அடிச்சுவடுகளை அவர் கேட்டார். அது ஒரு பண்டிகை நாள் அல்ல. அவர்கள் வழக்கமான மனிதர்கள் அல்ல. ஒரு பெரிய கூட்டம் அந்த வழியாக கடந்து சென்றது. அடிச்சுவடுகள் பலமாக இருந்தது. குருடர் ஆர்வமாக ஆனார். அவர் ஒரு வழிப்போக்கரிடம் கேட்டார், என்ன நடக்கிறது? வழிப்போக்கரின் பதில் அவரை சிலிர்த்தது. குணப்படுத்துபவர் நடந்து வருகிறார். குணப்படுத்துபவர் கடந்துவிட்டாரா அல்லது இன்னும் நெருங்கி வருகிறாரா என்று குருடனால் கண்டுபிடிக்க முடியவில்லை. குணப்படுத்துபவர் மற்றும் அவரது அற்புதங்களைப் பற்றி அவர் அதிகம் கேள்விப்பட்டிருந்தார். குணப்படுத்துபவர் அங்கு இருந்தார், ஆனால் குருடரால் பார்க்க முடியவில்லை. குணப்படுத்துபவரின் பெயர் இயேசு என்று ஒருவர் அவரிடம் சொன்னார். குருடன், "இயேசுவே, எனக்கு இரக்கம் செய்யுங்கள் " என்று தனது முழு பலத்தினாலும் கத்த ஆரம்பித்தார். இயேசு அதை கேட்டாரா என்பது அவருக்குத் தெரியவில்லை. எனவே, அவர் சத்தமாகவும் அதி சத்தமாகவும் கத்த ஆரம்பித்தார். மக்கள் அவரை கேலி செய்து அவருடைய வாயை மூடச்சொன்னார்கள். ஆனால் அவர் அமைதியாக இருக்கப் போவதில்லை. குணமடைய இது அவருக்கு கடைசி வாய்ப்பு. அவர் பல மாதங்கள் காத்திருந்த வாய்ப்பு அங்கே இருந்தது. அவர் குரலை அதிகரித்தார், இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் சத்தமாகவும் சத்தமாகவும் கத்தினார். இந்த மனிதனின் குரல் இயேசுவை நிறுத்தியது, அவர் குருடனை அழைத்தார். யாரோ ஒருவர் குருடனை இயேசுவிடம் அழைத்துச் சென்றார்கள். குருடன் இயேசுவின் காலில் விழுந்தான். பல மாதங்கள் காத்திருப்புக்குப் பிறகு குருடனரின் கனவு நிறைவாக போகிறது. அவர் குணமடையப் போகிறார் என்பதில் உறுதியாக இருந்தார். "நான் உனக்கு என்னசெய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்றார்." என்று ஒரு குரல் கேட்டது. அது யார் என்று குருடனுக்கு தெரியவில்லை. குருடனுக்கு ஒரே ஒரு தேவை இருந்தது. அவர் பார்க்க விரும்புகிறார். இயேசு சொன்னார்"நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்" குருடர் முதல் முறையாக பார்க்க முடிந்தது, அவர் இயேசுவைக் கண்டார். 

அன்புள்ள நண்பரே, உங்கள் நிலைமை மாறக்கூடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் உடல் மற்றும் இருதயத்தில் இருக்கும் வலியையும் இயேசு குணமாக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்களுக்கு முன் இருக்கும் நிலைமை சாத்தியமற்ற சூழ்நிலை போல் தோன்றலாம். ஆனால் இயேசுவுக்கு எல்லாம் சாத்தியம். 

 உங்கள் கையை உங்கள் இதயம் அல்லது உங்களது நோய்வாய்ப்பட்ட பகுதி மீது வைக்கவும். நீங்கள் குணமடைய நாம் சேர்ந்து பிரார்த்தனை செய்யப் போகிறோம். இயேசு உங்களை குணமாக்கப் போகிறார். நீங்கள் எங்களுடன் சேர்ந்து ஜெபிப்பீர்கள், இன்று நீங்கள் குணமடைவீர்கள். 

அன்புள்ள கடவுளே, உங்களைக் கூப்பிட்ட குருடனைப் போல, நான் இன்று உங்களை நோக்கி சதட்டமிட்டு கூப்பிடுகிறேன். எனக்கு ஒரு சிகிச்சை தேவை. தயவுசெய்து என்னைத் தொட்டு இப்போது குணமாக்குங்கள். என் பிரச்னையும், நான் அனுபவிக்கும் வேதனையையும் நீங்கள் அறிவீர்கள். என் துன்பத்தை நீங்கள் அறிவீர்கள். ஆண்டவரே, நான் அதிலிருந்து வெளியே வர விரும்புகிறேன். நான் உங்களிடம் நம்பிக்கையுடன் கூக்குரலிடுகிறேன். நீங்கள் என்னைக் குணப்படுத்தக்கூடிய கடவுள். நீங்கள் பூமியில் இருந்தபோது பலரை குணமாக்கியுள்ளீர்கள். நீங்கள் இப்போதும் பலரை குணப்படுத்துகிறீர்கள். நீங்கள் இப்போது என் வாழ்க்கையை மாற்றலாம். நீங்கள் என் உடலையும் ஆவியையும் புதுப்பிக்க முடியும். நான் உன்னை நம்புகிறேன். நான் என்று குணமடைய முடியும் என்று நம்புகிறேன். நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 

நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராக ஏற்று கொண்டீர்களா? நீங்கள் அடுத்தாக என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கே பார்க்கலாம் =>

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். உங்கள் ஜெப உதவிக்கு நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட பதிவுகள்

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி