Home » விடுதலை » தற்கொலை எண்ணங்களிலிருந்து » உங்கள் வாழ்க்கையை முடித்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா? சிக்கல்களை தீர்க்க இயேசு உதவ முடியும்

உங்கள் வாழ்க்கையை முடித்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா? சிக்கல்களை தீர்க்க இயேசு உதவ முடியும்


               

                    

You can read it in English here

அன்புள்ள நண்பரே, இப்பக்கத்தை வாசித்து கொண்டிருந்தால், நீங்கள் இப்போது உங்கள் வாழ்க்கையில் ஒரு கடினமான சூழ்நிலையை சந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நீங்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் உங்களுடன் சேர்ந்து ஜெபிக்க விரும்புகிறோம். உங்கள் இருதயத்தை இயேசு அறிவார். நீங்கள் சந்திக்கும் புயல் போன்ற பிரச்சனைகளையும் அவர் அறிவார். உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கடவுளைப் பொறுத்தவரை எல்லாம் சாத்தியம். உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது. நீங்கள் கடவுளின் விலைமதிப்பற்ற குழந்தை. அவர் உங்களை நேசிக்கிறார். உங்கள் எதிர்காலத்தை பொறுப்பு எடுத்து கொள்ள விரும்புகிறார். நம்பிக்கை இழக்க வேண்டாம். 

இயேசு செய்த ஒரு காரியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். பன்னிரண்டு ஆண்டுகளாக உடலில் இரத்தப்போக்கு ஏற்பட்ட ஒரு பெண் இருந்தார். டாக்டர்களால் அவளை குணப்படுத்த முடியவில்லை. மருத்துவ ரீதியாக, அவளுக்கு நம்பிக்கையும் எதிர்காலமும் இல்லை. ஒரு நாள், இயேசு நடந்து செல்வதைக் கண்டாள். இயேசுவைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருந்தது. இயேசுவிடம் சென்று உதவி கேட்க அந்த பெண்மணிக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் அவளுக்கு ஒரு தீவிர நம்பிக்கை இருந்தது. எப்படியாவது அந்த பெண்மணி கூட்டத்தை கசக்கி, இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட விரும்பினார். இயேசு தன்னுடன் பேசுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. குணமடைய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இயேசுவைத் தொடுவதே அவளுடைய விருப்பமாயிருந்தது. அவள் இருதயம் ஏங்கிக்கொண்டிருந்தது. அவள் இருதயத்தில் பசியுடன் இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டாள். உடனே குணமடைந்தாள். இயேசு அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார். 

அன்புள்ள நண்பரே, இயேசு நம் வாழ்க்கையிலும் இதைச் செய்ய முடியும். இயேசு மீது நம்பிக்கையை வைத்து இன்று அவருடைய சந்நிதிக்கு செல்வோம். குழந்தை தன் தந்தையிடம் செல்வது போல, இயேசுவை அணுகுவோம். என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடவுள் இதைச் செய்தார். அதைப் பற்றி இங்கே படிக்கலாம் =>

வேதம் சொல்கிறது, "இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை". அன்புள்ள நண்பரே, வாழ்க்கையின் முன்னால் உள்ள பிரச்சனைகளை பார்க்க வேண்டாம். இயேசுவைப் பாருங்கள். வானத்தையும் பூமியையும் படைத்த கடவுளிடமிருந்து நம்முடைய உதவி வரும். இயேசுவால் நமக்காக ஒரு வழியை திறக்க முடியும். அவர் மீது நம்பிக்கை வையுங்கள். அவரை நம்புங்கள். 

உங்கள் வாழ்க்கைக்கு இயேசு ஒரு திட்டம் வைத்திருக்கிறார்

வேதம் சொல்கிறது, “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” கடவுள் பெரிய திட்டங்களை நமக்காக வைத்திருக்கிறார். நாம் யார், நாம் எங்கிருந்து வந்தோம், கடந்த காலத்தில் என்ன செய்தோம் என்பது முக்கியமல்ல. இயேசு தம்முடைய அழகான திட்டத்தின் ஒரு பகுதியாக நம்மைப் படைத்தார். நம்மைப் படைத்த மகத்தான நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் சிறந்த திறமைகளினால் நம்மை நிறைத்திருக்கிறார். எல்லா கதவுகளும் மூடப்பட்டுள்ளன என்று நீங்கள் நினைக்கலாம். எல்லாம் முடிவடைந்தது, இனி எந்த நம்பிக்கையும் இல்லை என்று நினைக்கலாம். இயேசு நமக்கு திறந்திருக்கிற கதவுகளை காண்பிக்க முடியும். நம் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கையை கொடுக்க முடியும். 

கடவுளிடத்தில் இப்போது திரும்புங்கள் 

எதிர்மறையான எண்ணங்களைத் தூக்கி எறியுங்கள். கடவுளை நம்புங்கள். இந்த வலைத்தளத்தைப் பார்வையிடும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம். இயேசு உங்களுடைய கண்ணீரையும் துக்கத்தையும் துடைப்பார். அவர் நம்முடைய துக்கங்களையும் நோய்களையும் சிலுவையில் சுமந்தார். இயேசு ஏற்கனவே சுமந்து தீர்த்த அதே துக்கத்தையும் வேதனையையும் நாம் இனி சுமக்க வேண்டியதில்லை. 

நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம். இருதயத்தின் மீது கையை வைத்து இயேசுவிடம் ஜெபம் செய்யுங்கள். அவருடைய பெயரை “இயேசு” என்று கூப்பிடுங்கள். இயேசு இன்று உங்களுக்காக ஒரு அதிசயம் செய்வார். அவருக்கு சாத்தியமற்றது எதுவுமில்லை. இயேசு சொன்னார், "உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" இயேசு நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பார். நாம் ஒன்றாக ஜெபிக்கலாமா? தயவுசெய்து கீழேயுள்ள ஜெபத்தை உங்கள் சொந்த வார்த்தைகளில் செய்யுங்கள். 

அன்புள்ள இயேசுவே, நான் சந்திக்கும் பிரச்சினைகளை நீங்கள் அறிவீர்கள். என் வாழ்க்கையில் ஏற்பட்ட வலியையும், புயலையும் நீங்கள் அறிவீர்கள். உங்கள் முகத்தைத் தேடும் எவருக்கும் சமாதானம் தருவதாக உறுதியளித்துள்ளீர்கள். நான் உங்கள் முன்னிலையில் வருகிறேன். தயவுசெய்து என் இருதயத்தைத் தொட்டு, இப்போது என்னை குணப்படுத்துங்கள். நான் இப்போது என் பிரச்சினைகளை உங்கள் முன்னிலையில் ஒப்படைக்கிறேன். என் பிரச்சினையை விட நீங்கள் பெரியவர். உங்களுக்கு எல்லாம் சாத்தியம். 

உம்முடைய பரலோக ஆறுதல் என் இருதயத்தை நிரப்பட்டும். உங்கள் சக்தி என் உடலில் பாயட்டும். ஆண்டவரே, நீங்கள் அதை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். எதிர்மறை எண்ணங்களை அகற்றி விடுங்கள். என் வாழ்க்கையை ஆசீர்வதியுங்கள். உங்கள் அமைதியும், நிம்மதியும் என் இருதயத்தை நிரப்பட்டும். நான் முழு மனதுடன் உங்களைப் பின்தொடர விரும்புகிறேன். வாழ்க்கையில் சரியான தேர்வுகளை செய்ய எனக்குக் கற்றுக் கொடுங்கள். 

அன்புள்ள இயேசுவே, தயவுசெய்து எனது கடந்த கால தவறுகளை மன்னியுங்கள். உங்கள் விலைமதிப்பற்ற இரத்தத்தால் என்னை சுத்தம் செய்யுங்கள். நான் உங்கள் மகனாக அல்லது மகளாக விரும்புகிறேன், என் வாழ்நாள் முழுவதும் உங்களை பின் பற்ற விரும்புகிறேன். தயவுசெய்து என் வாழ்க்கையை மாற்றுங்கள். என்னை வழிநடத்தி, வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க எனக்கு உதவுங்கள். எனக்கு ஞானத்தைக் கொடுங்கள். 

எனது பிரார்த்தனைகளுக்கு நீங்கள் விரைவில் பதிலளிக்கப் போகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். எனது வாழ்க்கையை மாற்றி அமைக்க போவதற்கு முன்கூட்டியே நன்றி கூறுகிறேன். நான் இயேசுவின் வல்லமைமிக்க பெயரில் ஜெபிக்கிறேன். ஆமென். 

அன்புள்ள நண்பரே, இதை வாசிக்கும் அனைவருக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உங்கள் இருதயத்தை இயேசு அறிவார். நீங்கள் இப்போது சந்திக்கும் பிரச்சினைகள் அவருக்குத் தெரியும். அவருக்கு சாத்தியமற்றது எதுவுமில்லை. 

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி